மயிலாடுதுறை, டிச.2 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடை பெற்ற பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 258 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில் மொத்தம் 258 மனுக்கள் பெறப் பட்டன. மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்ப டைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தரங்கம்பாடி வட்டம் மாணிக்கப் பங்கு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் என்பவரது நாட்டுப்படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சேத மடைந்தது. இதனால், தமிழ்நாடு முதல மைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி பயனாளிக்கு வழங்கினார்.